வந்தனா வாசலை
சுத்தமாகப் பெருக்கி
கோலமிட்டாள்.
கைகள்
வளைந்து நெளிந்து
கம்பிக் கோலம் சிக்கலாகிப்
போனது. சிக்கலை
சீர்படுத்தி கோலத்தை ஒரு
வழியாய் முடித்து
வைத்தாள்.
கோலத்தின்
நடுவே
சாணத்தை
வைத்து., பூசணிப் பூவை சிரிக்க விட் டாள்.
தன்
நெற்றிக்கு
பொட்டிட்டு,
இரண்டரை வயது
குழந்தை
மதுவை தூக்கிக்
கொண்டு சுந்தரியின்
வீ
ட்டின் முன்
வந்து நின்றாள்."
"அக்கா,
நான்
வார வரைக்கும் புள்ளையை பார்த்துக்கக்கா.
ஆயா கடையில வாங்குன இட்லியும், இடியாப்பமும் இருக்கு . குழந்தை அழுதா குடுத்திருக்கா."
பால் பாட்டிலை குழந்தை
கையில் கொடுத்து விட்டு
விடுவிடுவென
ஓரமாய்
நின்ற குப்பை
வண்டியை
, இழுத்தபடி நடந்தாள்.
வந்தனா, வந்துட்டியா.., இரண்டு நாளா
குப்பை எல்லாம் நிறைஞ்சுடுச்சி
.., நீ எப்போ வருவேன்னு பார்த்திட்டு இருந்தேன். சொன்னபடியே பார்வதி
தட்டிய
குப்பையை
தன்
வண்டியில் நிரப்பிய
படி நடந்தாள்.
ஒவ்வொரு வீட்டு
குப்பை கூடைகளும் சுத்தமாக,
சுத்தமாக
இவளும், இவள் வண்டியும் அழுக்காகி
கொண்டிருந்தார்கள்.
ஒரு வழியாய்
, குப்பை
வண்டியை ஓரம்
கட்டி வீடு
நோக்கி நடந்த
போது மனது மரத்துப் போனது.
சுந்தரம் இன்று எந்நிலையில் வருவானோ..,?
சுந்தரம் மலிவான மதுவை
உள்ளுக்குள்
இறக்கி
மகிழ்வாக இருந்தான்.
மகிழ்வாக இருந்தான்.
.வீட்டிலுள்ள பொருட்கள் வாரியிரைத்து சுத்தமில்லாமல்
கிடந்தது.
குழந்தையை தூக்கிக் இடுப்பில் வைத்துக்
கொண்டாள்.
அடுப்பை பற்ற வைத்து அரிசியை களைந்து
போட்டாள். அடுப்பை
போல மனதும்
எரிந்து கொண்டிருந்தது.
வாசலிலே பூசணிப்பூ
வாடி
வதங்கி
கொண்டிருந்தது.
அவள்
வாழ்க்கையைப் போல..,!!
உமா நாராயண் , (குமரி உத்ரா )