பெண்ணே
பெருமை கொள்..,
பெண்ணாய்
பிறந்ததற்கு..,!!
வாசம் வீசிய மலர்கள் கூட..,
உனைப்பார்த்து..,
மௌன மொழி பேசட்டும்..,!!
விண்ணில்
நீந்தும்..,
வெண்மதியும்..,
உனைக் கண்டு
வியக்கட்டும்..,!!
ஆர்ப்பரிக்கும்
கடலலை கூட.,
கொலுசு
கால்களில்
சரணடையட்டும்.,
இதமாய்
வீசும்.,
தென்றல்
காற்று கூட.,
வீச மறந்து சுவாசம் முட்டட்டும்.,
மண்ணை முட்டி
முளைத்து
நிற்கும் விதைகள்
போல..,
நீயும் விண்ணை
தட்டி உயர்ந்து நிற்கிறாய்..,!!
போகாமல்.,
வளர்ச்சி
எனும்., பாதையில்
நீ
தனித்துவம் பெற்றாய்.,!!
தாகம் தீரா நதிகள் போல.,
லட்சியம்
எனும் கடலை நோக்கி..
நீ விரைந்து
செல்கிறாய்..,!!
இங்கே மகுடம் சூட்ட.,
மணிமுடி தரிக்க.,
யாருக்கும்
நேரமில்லை.,
கவரி மான்களுக்கு .,
இங்கே கர்வமில்லை..,
பெண்ணுக்குங்கே.,
வீழ்ச்சியில்லை..,!!
பெண்ணே பெருமை
கொள்.,
பெண்ணாய்
பிறந்ததற்க்கு..,!!
உமா நாராயணன்., (குமரி
உத்ரா )