Monday, January 14, 2019

தை மகள் வந்தாள்..,!!



தையல்  அவள்
வானவில் வண்ணம் குழைக்க.,
தூரிகை எடுத்தாள்.,!!

அத்திப் பூவாய்..,
அகம் மலர்ந்தாள்,!!

தித்திக்கும் தை மாதத்தில்.,
முதலடி வைத்தாள்.,

பச்சரிசி பொங்கலும்.,
இள   மஞ்சளும்.,

சேதி கேட்ட செங்கரும்பும்., 
கதிரவனை தேடின.,!!

பொங்கலோ பொங்கல் என,
பூரித்துப் போயின..,!!

நெற்கதிர்கள் நாணின..,!
ஏறும் கலப்பையும்  வீரம் பூட்டின.,!!

கொம்புகளில் வர்ணம் தீட்டிய
மாடுகள் மகிழ்ந்தன.,!!

பொங்கட்டும் பொங்கல்.,
தங்கட்டும்  திங்கள்.,!!

பொழியட்டும் வானம்..,
விளையட்டும் விளைச்சல்.,!!

செழிக்கட்டும் தேசம்.,
நிலைக்கட்டும் நேசம்.,!!


                       உமா நாராயண். (குமரி உத்ரா)








சித்திரையே வருக.,!!

சித்திரையே.., ஏன் விசித்திரமாய் பார்க்கிறாய்..?? 2020 என்று., இறுமாப்புடன் நிமிர்ந்த போது.., உலகமெங்கும் 🌏 கிடைத...