உலகம் எனும் ஓவியம்..,
பெண்களால் அழகு பெறுகிறது..,!!
மங்கைக்கு ஒரு வாழ்த்து
மலரே உனக்கொரு பாராட்டு..,!!
நிலவென்று வர்ணித்த..,
நிலாக்காலம் போய்..,
அந்த நிலவையே சுற்றி வந்து..,
நீல் ஆம்ஸ்ட்ராங்கை..,
நினைக்க வைத்தவள் நீ..,!!
இலக்கியங்களில் உலா வந்த..,
நாட்கள் போய்..,
நாட்டுக்கும், வீட்டுக்கும்..,
உயிர் எழுத்தானவள் நீ ..,!!
முள்ளில் தான் வாழ்க்கை..,
என்றாலும்..,
முடிந்து போகாமல்..
சீறி நடை போடும்..,
சிங்கப் பெண்ணானவள் நீ..,!!
புள்ளிகள் தவறி..,
கோலங்கள் பிரிந்தாலும்..,
புதையாமல்..,
சமுதாயத்தை சீர் திருத்தும்..,
ரங்கோலி பெண்ணாய் நீ..,!!
மண்ணை தட்டி முளைத்து நிற்கும்..,
விதைகள் போல..,
விண்ணை தட்டி..,
உயர்ந்து நிற்கிறாய்..,!!
தாகம் தீரா நதிகள் போல..,
லட்சியம் எனும்..,
கடல் நோக்கி..,
விரைந்து செல்கிறாய்..,!!
ஒளி விளக்காய் பிரகாசம் தந்து..,
குடும்பத்தை அரவணைத்து செல்லும்..,
பெண் என்னும்..,
தேவதைகளே..,
உலகம் எனும் ஓவியம்..,
உங்களால் தான் அழகு பெறுகிறது..,!!
உமா, குமரி உத்ரா.