Monday, December 10, 2018

மறந்த முகவரியும்.., சில மனித முகங்களும்..,!!



பிறந்த போது தாயிடம் என்னை  கையளித்த செவிலி..,!

பள்ளி சென்ற முதல் நாள் தூக்கி  கொண்டு விட்ட  தங்கமணி அண்ணன்..,!

முதல் தமிழை  நாவில் உச்சரிக்க வைத்து உயிரோட்டம் பார்த்த அழகு பாண்டியன் சார்..,!

உழவருக்கு மதிய உணவு கொண்டு சென்று  வயல் வரப்பில் தடுமாற  கை கொடுத்த    வண்டிக்காரர்..,!

உழுது  விட்டு நெல் மணிகளை விதைத்து நாற்றுக்கு உயிர் கொடுத்த விவசாயி..,!

வாய்க்கால் கரையில் ,நண்டு துளைகளில் தென்னங் கீற்று  பரப்பி நண்டு பிடித்த குட்டி நண்பர்கள்..!

பனை மரத்தின் பதநீரை இறக்கி பனையோலை பட்டைகளில் குடிக்க வைத்த பாண்டிக்காரர்..,!

நரிப்பயறும்., நாவல் பழமும்., காரங்காவும்., ஈச்சம் பழமும் அணிலாய்
கொறிக்க சொல்லி தந்த  சின்ன சகாக்கள்..,!!

அம்பலத்திப்  பூவில் தேன் குடித்து, குளத்தின்   ஆழங்களில் நீச்சலடிக்க வைத்த ஆரம்ப கால சிநேகிதிகள்..!

வானொலியின் பதிவலையில் என் குரல் வர என்னை நெறிப்படுத்திய முதல் அறிவிப்பாளர்..!

கவிதைகள் காற்றில்  வலம் வர  செவிகளால் என்னோடு கைக்குலுக்கிய  நேயர்கள்..,!.,

திருமணத்தில் தீ வலம் வந்தபோது  மந்திரம் சொல்லிய பூணுல்
அய்யர்..,!

புகுந்த வீட்டில் மணப்பெண்ணாய்  போனபோது  உறவுகளின் சுய சரிதை சொன்ன பக்கத்து வீட்டுப் பாட்டி..,!

நானும் தாயான போது தைரியம் சொன்ன இளம்
மருத்துவர்..,!

கைகளை கூட்டி., வாய் சப்பிய  குழந்தையை குளிப்பாட்டிய வெள்ளை தேவதைகள்..!

தூரத்து ஆலயத்தில் நேர்ச்சை செய்ய போனபோது ரயிலோட்டிய முகமறியா ரயிலோட்டிகள்..,!

இன்னொரு பறவையாய் ஆகாயம் பறந்து வியந்தபோது பயணத்துக்கு பலம் சேர்த்த விமான ஓட்டிகள்.!

புது தேசத்தில்  நேசக் கரம் குலுக்கி தமிழ் தாகம் தீர்த்த., அன்பின் தமிழ்ச் சொந்தங்கள்..,!

இன்னும் எத்தனையோ..,? 
இறைவனுக்குத்தான்  தெரியும்..,

வழியில் வரப்போகும்..,
முகமறியா சில முகவரிகள்..,!!!


                                                             
                    உமா நாராயண், (குமரி உத்ரா). 




Friday, October 12, 2018

" சுத்தம் "


         


ந்தனா  வாசலை சுத்தமாகப்  பெருக்கி  கோலமிட்டாள்.  கைகள் வளைந்து  நெளிந்து கம்பிக் கோலம்  சிக்கலாகிப் போனது.  சிக்கலை சீர்படுத்தி கோலத்தை  ஒரு வழியாய்  முடித்து  வைத்தாள்.


     கோலத்தின்  நடுவே  சாணத்தை வைத்து., பூசணிப் பூவை  சிரிக்க விட் டாள்.  தன்  நெற்றிக்கு  பொட்டிட்டு, இரண்டரை  வயது  குழந்தை மதுவை   தூக்கிக் கொண்டு  சுந்தரியின்  வீ ட்டின்  முன் வந்து  நின்றாள்."

     "அக்கா,  நான் வார வரைக்கும் புள்ளையை  பார்த்துக்கக்கா. ஆயா கடையில வாங்குன  இட்லியும், இடியாப்பமும் இருக்கு . குழந்தை அழுதா  குடுத்திருக்கா."

  பால் பாட்டிலை  குழந்தை கையில் கொடுத்து  விட்டு  விடுவிடுவென  ஓரமாய் நின்குப்பை  வண்டியை , இழுத்தபடி நடந்தாள்.  


  வந்தனாவந்துட்டியா.., இரண்டு  நாளா குப்பை எல்லாம்  நிறைஞ்சுடுச்சி .., நீ எப்போ   வருவேன்னு  பார்த்திட்டு  இருந்தேன். சொன்னபடியே  பார்வதி  தட்டிய   குப்பையை  தன் வண்டியில் நிரப்பிய படி  நடந்தாள்.

  ஒவ்வொரு  வீட்டு  குப்பை   கூடைகளும்  சுத்தமாக,  சுத்தமாக   இவளும், இவள்   வண்டியும்  ழுக்காகி   கொண்டிருந்தார்கள்.

      ஒரு வழியாய் ,  குப்பை வண்டியை  ஓரம் கட்டி  வீடு நோக்கி  நடந்த போது  மனது  மரத்துப்  போனது. சுந்தரம் ன்று  எந்நிலையில்  வருவானோ..,?

      சுந்தரம்  மலிவான  மதுவை  உள்ளுக்குள்  இறக்கி  
மகிழ்வாக  இருந்தான்.

           .வீட்டிலுள்ள  பொருட்கள்  வாரியிரைத்து  சுத்தமில்லாமல்  கிடந்தது.
 அதன்  நடுவே  குழந்தை  மது  விளையாடிக்  கொண்டிருந்தது.

    குழந்தையை  தூக்கிக்      இடுப்பில்  வைத்துக்   கொண்டாள். அடுப்பை  பற்ற  வைத்து  அரிசியை  ளைந்து போட்டாள்அடுப்பை போல  மனதும் எரிந்து  கொண்டிருந்தது.

          வாசலிலே  பூசணிப்பூ  வாடி  வதங்கி  கொண்டிருந்தது.  அவள்  வாழ்க்கையைப்  போல..,!!

                                                 உமா நாராயண் , (குமரி உத்ரா )


     

சித்திரையே வருக.,!!

சித்திரையே.., ஏன் விசித்திரமாய் பார்க்கிறாய்..?? 2020 என்று., இறுமாப்புடன் நிமிர்ந்த போது.., உலகமெங்கும் 🌏 கிடைத...