வசந்த தூறலே..,
எங்கள் வாசல் ஓடி வந்த..,
தேவதை நீ..,!!
இன்ப சாரலே..,
காற்றோடு கை குலுக்கி..,
காதோரம் உரசிய
காதல் அம்பு நீ..,!!
உருவம் தெரியாது..,
உணர்வுகளில் பதிந்து போன..,
உதயம் நீ..,!!
உயரமாய் நின்று.., உயர்வாய் பேசி..,
பட்ட மனங்களை..,
தொட்டு, சிறைப்பிடித்தாய் நீ..,!!
காலைத் தென்றலாய்..,
கவி இழைத்த..,
காதல் வரிகளை..,
காதோரம் நனைத்தாய்..,!!
வேக்கப் தமிழனாய்..,
உலக விஷயம் பேசி..,
உயிர்ப்பாய் எழ வைத்து..,
சொந்தங்களுக்கு..,
சந்தம் வாசித்தாய்..,!!
ஸ்டைலிஸ் தமிழச்சியாய்..,
சினிமாவில் உதிர்த்த..,
விஷயங்களையும்..,
உடலின் மருத்துவ..,
எச்சரிக்கையும், தந்து..,
எங்கள் தலை நிமிர்த்தினாய்..,!!
கிளாசிக் மேட்னியாய்..,
திசை எட்டும்.., செய்திகள் தந்து..,
மயிலிறகால் வருடும்..,
மகரந்த பாடல்களை..,
எண்பதின் கனவு பாடல்களாய்..,
உள்ளத்தில் தைத்தாய்..,!!
ஹை5 வித் நிம்மியாய்..,
நிமிர்ந்த பேச்சில்..,
சிகரம் தொட்டு..,சிறகடிக்க வைத்து..,
சிங்கமாய்.., கர்வமாய்..,
கலைந்த இதயங்களை..,
தேனீயாய் சேகரித்து..,
சென்றாய்..,!!
வாட்ஸ் அப் தமிழனாய்..,
குற்றாலத் தூறலாய்..,
இன்ப சாரலாய்..,குயிலின்..,
குரலை உள்ளடக்கி..,
ஒயிலாய் உள்ளங்களுக்கு..,
வலை வீசினாய்..,!!
இரவும்.., இசையுமாய்..,
வெண்கல குரலின் வலிமையால்..,
எங்களை..,ஓவியமாய்..,
சிறை பிடித்து..,
அமர காவியங்கள் தந்து..,
கவிதை சொல்லி.., கதைகள் பேசி..,
ஓராயிரம் இதய வாசல்களை ..,
கொள்ளை கொண்டு போனாய்..,!!
உன்னால் வசம் இழந்து போன..,
எங்கள்..,இதயங்களை..,
எப்போது கொண்டு வந்து..,
சோ்க்க போகிறாய் நீ..,
தமிழ் 89.4 எப்.எம்.....!!!
உமா நாராயண்.,( குமரி உத்ரா)
No comments:
Post a Comment