Monday, April 13, 2020

சித்திரையே வருக.,!!















சித்திரையே..,
ஏன்
விசித்திரமாய்
பார்க்கிறாய்..??


2020 என்று.,
இறுமாப்புடன்
நிமிர்ந்த போது..,
உலகமெங்கும் 🌏
கிடைத்தது
ஒரு முகமூடி..!!


சாணத்தால் வீடு மெழுகி.,
அரிசி "மா " கோலமிட்டு.,
முக்கூட்டு அடுப்பில்.,


சோறு, குழம்பு, அவியல்.
தழைய, தழைய..,
கொதித்தபோது.,


வீட்டில்
பூனை உறங்கும்..,
எலி உறங்கும்..,
வைரஸ்  வந்து..,
உறங்கியதில்லை..!!


தேர் மஞ்சள்..,
கல்லிழைத்து..,
பட்டு முகத்தில் பூசி.,
தலைக்கு குளித்து.,


கண்ணாடி..,
பார்த்த போது.,
கண்ணடி வந்து சேரும்..,
கோவிட் 19
வரவில்லை..!!


ஏர் கூட்டி.,
நாத்து நட்டு..,
களை பறித்து.,
நெல் கதிரும்.,
தலை சாய்த்து..,


பூமித் தாயும்..,
பச்சை ஆடை..,
உடுத்தி.,
பகட்டாய்..,
சிரித்த போதும்..,


சேற்றங்காலில்.,
கால் நனைத்து.,
விவசாயம்..,
பார்த்த போதும்.,


உயிரில்லா..,
பூச்சிகள்.,
உயிர் பறிக்க..,
வரவில்லை..!!


சீமை நெல்லியும்.,
மா வடுவும்.,
நொண்டங்காயும்.,
காரங்காயும்.,


நரிப்பயறும்.,
நாவல்பழமும்.,
"கை" கழுவாத.,
பத்து விரல்களில்.,
இனித்தபோது கூட..,


கொரோனா.,
உள்ளங்கையில்.,
பரவவில்லை...!!


நாலு கட்டு வீட்டிற்குள்.,
நாலு தலைமுறை.,
வாழையடி.,
வாழையாக..,
கூடி வாழ்ந்து..,


ஒரு டஜன் பிள்ளைகள்.,
ஓடி ஆடி.,
விளையாடியும்.,
மூச்சு விடக்கூட..,
ஒரு கிருமி..,
வந்ததில்லை..!!


இப்போது மட்டும்.,
ஏன்.,
சீறி வருகிறது.,
கொரோனா..??


சித்திரையே..,
முரசு கொட்டு.,
எத்திக்கும்..,!!



காற்றும் மாசு பட்டு.,
காசும் மாசு பட்டு.,
ஊரும் மாசுபட்டு..,
உள்ளமும் மாசுபட்டு..,


உதவாத வாழ்க்கைக்கு.,
முற்றுப் புள்ளியல்ல..,
இது..,
முதற் புள்ளியாக.,
இருக்கட்டும்.,!!


உலகம் 🌏.,
திருந்த.,
ஒரு சந்தர்ப்பம்.,
தருகிறது கொரோனா..,!!


திருந்துவோம்..!!
திருத்துவோம்..,!!
தமிழ் புத்தாண்டு..,
வாழ்த்துக்களோடு..,!!



             உமா நாராயண், ( குமரி உத்ரா )

6 comments:

சித்திரையே வருக.,!!

சித்திரையே.., ஏன் விசித்திரமாய் பார்க்கிறாய்..?? 2020 என்று., இறுமாப்புடன் நிமிர்ந்த போது.., உலகமெங்கும் 🌏 கிடைத...