வைகறையின் முதல் விழிப்பு..,
சூரிய வணக்கம்..,!!
பாரதத்தில் உலவ விட்ட..,
இறை.. அவனுக்கு
இதயத்திலிருந்து வணக்கம்..,!!
பாதத்தை தரையில் வைக்க..,
உதவிய தாய்மைக்கு..,
தனி வணக்கம்..,!!
பட்டதாரியாய் பயணிக்க வைத்த..,
கல்வி செல்வத்துக்கு..,
காதல் வணக்கம்..,!!
கன்னி அவளை கரம் பிடித்து..,
நிமிர்கையில்..,
பெற்றோரு்க்கு நன்றி வணக்கம்..,!!
இல்லத்தின் இருள் நீக்கி..,
இதயத்தில் இடம் பிடித்த..,
இல்லாளுக்கு இனிய
வணக்கம்..,!!
தந்தை என்ற விழிச்சொல் கேட்டு..,
நெக்குருகி நிக்கையிலே..,
நெஞ்சத்தில் அமர்ந்தவளுக்கு..,
ஓராயிரம் வணக்கம்..,!!
பெற்ற பாசத்தில் பிள்ளையை..,
இன்னொருவருக்கு..,தாரை வார்க்கும் போது..,
தானாய் கூடும் கைகள்..,
மருமகனே என் வணக்கம்..,!!
பேரனை.., பேத்திகளை..,
கொஞ்சி விளையாட..,
தூக்கும் போது.., எட்டிப் பார்க்கும்..,
என் முதுமைக்கு, பாச வணக்கம்..,!!
நானும் தளர்ந்து சாய்ந்து..,
சவமான நாளில்.., நாலு பேர்..,
உதவியோடு போகும் கடைசி
யாத்திரைக்கு..,
என் இறுதி வணக்கம்..,!!!
உமா நாராயண். (குமரி
உத்ரா)
Nice...
ReplyDeleteNice...
ReplyDeleteமிக்க நன்றி..
ReplyDelete