உலகம் என்னும் ஓவியம்.., பெண்களால் அழகு
பெறுகிறது...,
மங்கையராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திடல்
வேண்டுமம்மா..,!! சொன்னவர் பாரதி..,
மாதவம் புரிந்து
பிறந்துள்ள பெண்கள் யாவரும்.., சமுதாயத்தில் சமமாகவும் மரியாதையுடனும் நடத்த
படுவதில்லை..,! ஆனால்.., தைரியத்தையும் தன்னம்பிக்கையும் கொண்ட பெண்கள் சிகரம் தொட
தவறியதுமில்லை.!
ஒரு நாட்டின்
வளர்ச்சியை நாட்டிலுள்ள பொருளாதார முன்னேற்றம்.,கல்வி அறிவு நிர்ணயிக்கிறது. ஒரு
பெண் நலம் பெற்றால்., அவள் குடும்பமும் சமுதாயமும் உயர்வு பெருகிறது.!
வீட்டிற்குள்ளே,
இருந்த பெண் சமுதாயம் தற்போது வானிலும் பறந்து கொண்டிருக்கிறது. இன்று அடுப்பூதும்
பெண்கள் ஆயுதக்களம் வரை முன்னேறி வருகின்றனா்.
“மனிதனை வழி
நடத்தி செல்வது கண்கள்..!!! சமுதாயத்தை ஒளி பெற செய்வது பெண்கள்..,!! என்பதை
மறக்கவோ, மறுக்கவோ முடியாது.!
“வீட்டிலோர் பொந்தில் வாழ்வதை வீர பெண்கள்.,
விரைவில் ஒழிப்பராம்.” எனும் பாரதியின் கூற்று நனவாகி வருகிறது.
தமிகத்தை சேர்ந்த அர்ச்சனா ராமசுந்தரம்., எனும் ஐ.பி .எஸ் அதிகாரி., “சாஷா
ஸ்ட்ரா சீமா பால்” எனும் அமைப்பில், துணை ராணுவ படை அதிகாரியாக..,இந்திய நேபாள
எல்லைகளை பாதுகாக்கும் பணியில் நியமிக்க பட்டுள்ளார். இந்த பதவிகளுக்கு பெண்
அதிகாரி அமர்த்த படுவது இதுவே முதல் முறை..,!! இது பெண்ணின் குலத்துக்கே
பெருமை..,!!
பெண்களின் சிந்தனை
பெருமைக்குரியது. சிந்தனைகளின் ஊற்றாக ஆரவாரமில்லாமல் வீட்டிலிருந்தே சுடர் ஒளி
ஏற்றுகின்றார்கள் சில `பெண்கள்..!!
சர்வதேச மகளிர்
தினம்.., மார்ச் எட்டாம் தியதி கொண்டாடப் படுகிறது. இந்த தினத்தை நாம் எளிதாக கொண்டாடி விடுகிறோம்.!
இத்தினத்துக்கான போராட்டங்களும்..,வெற்றிகளும் எளிதாக கிடைத்தவை அல்ல..,!! இந்த
சமுதாயம்.., பெண்கள் முன்னேற்றம் எனும் பாதையில்., சில மைல்கற்களை தான் கடந்து
வந்திருக்கின்றன.
இந்திய தேசம்
கிராமங்களால் ஆனது. அதனால் தான்.., “கிராமங்கள் இநதியாவின் விடியல்..,!!” என
காந்திஜி கூறியுள்ளார்.கிராமங்களில்.., கல்வியறிவு, பெண்களின் பாதுகாப்பு இரண்டிலும்
தான் பெண்கள் சமுதாயம் உயர வழி இருக்கிறது.!
சாதனை ஆண்களையே எப்போதும் உதாரணம் காட்டி பேசும் சமுதாயம்..,பெண்
சாதனையாளர்களை நினைத்து கூட பார்ப்பதில்லை.!
பெண்கள் உலகின் புண்ணிய விதைகள். அவர்களை விருட்சமாக்கி
பார்க்காமல் நெருப்பில் வீசி எறிந்து சில இடங்களில் தவறுகளை செய்தும் வருகிறது. இந்த
சமுதாயம்.!
ஓவ்வொரு ஆணின்
பின்பும் ஒரு பெண் இருக்கிறாள்.ஒருவரின் சொந்த நாட்டை அதனால் தான், தாய் நாடு என
சொல்கிறோம். ஒவ்வொரு ஆரம்ப பள்ளிக் கூடங்களிலும், ஒரு பெண் தான் ஆசிரியையாக
இருப்பார். பெண்களுக்கே உரிய தாய்மை குணம், பொறுமை, பரிவு, கருணை, பண்பு எல்லாமே
பெண்களிடத்தில் அடங்கி இருப்பதே இதற்கு காரணம்.!!
பெண்.., கவிஞா்கள், அறிஞர்கள், எழுத்தாளர்களின் சிந்தனைக்கு
வற்றாத அட்சய பாத்திரமாகவே திகழ்கிறாா்கள். பெண்கள் என்னும் தேவதைகள்..,சமுதாயத்தில் சாதனை சிகரத்தை தொடும் நாள் வெகு தொலைவில் இல்லை
..,!!!
இந்த மகளிர் தின மாதத்தில்.., பெண்ணாகிய நான், பெண்களை பற்றி எழுதுவதில் பெருமை கொள்கிறேன்..!!!
இந்த மகளிர் தின மாதத்தில்.., பெண்ணாகிய நான், பெண்களை பற்றி எழுதுவதில் பெருமை கொள்கிறேன்..!!!
உமா நாராயண் (குமரி உத்ரா)
அருமை...
ReplyDeleteஅருமை...
ReplyDeleteமிக்க நன்றி
ReplyDeleteHow do you make money with an online sports betting platform?
ReplyDeleteHow do you make money from sports betting apps and sportsbooks? · First, register with a licensed online sportsbook. · หารายได้เสริม You can create an