Wednesday, March 8, 2017

ஆவதும் பெண்ணாலே...,!!!






கருவறையின் கதகதப்பில்.,
கட்டுண்டு கிடக்கும்..,
ஆணென்ன..,பெண்ணென்ன..,??

எல்லோரையும் அடக்கும்
அதிசய உலகமவள்..,
ஆவதும் பெண்ணாலே..,!!




முதல் சூடு தந்து, 
முதல் பசி போக்கி..,
முதல் யுத்தத்தில்,
கால்களை உதைக்கும்..,

குழந்தைக்கு அன்பின்
உயிர்ப்பை தருபவள்..,!!
ஆவதும் பெண்ணாலே..,!!

முதல் இதழ் சத்தம்.,
முதல் தவழல்..,
முதல் பேச்சு..,
அனைத்தையும்.,


புன்னகைக்குள்..,
பூட்டி விடும்,
அன்னை எனும் மாணிக்கமவள்..,!!
ஆவதும் பெண்ணாலே..,!!


முதல் நடை..,
முதல் எழுத்து..,
அவள் ஆசிர்வாதத்தில்..,


நல்ல ஒரு மகவாய்
வளரும் பூக்களுக்கு..,
வாசமவள்..,!!
ஆவதும் பெண்ணாலே..,!!



தனிக் கூடு கட்டி..,
அங்கே துயிலுறங்க..,
துணை தேடி,
அதனால் ஒரு மகவை..,


நமக்கென்று ஈன்றாள்..,
இன்னொருவள்..,
ஆவதும் பெண்ணாலே..,!!


பல மனங்கள் 
இணைந்த வீடு குடும்பம்..,
குடும்பத்தின் குதூகலத்தில்
நனைய வைத்து..
,

தலை முறைகளை பெருக்கி..,
தன்னையும் சுருக்கி..,
சாகித்தியத்தை புரட்டும் புனிதமவள்..,!!
ஆவதும் பெண்ணாலே..,!!

           உமா நாராயண், (குமரி உத்ரா)


7 comments:

  1. ஆம் ஆவதெல்லாம் பெண்ணாலெ, முதல் சூடு, முதல் பசி, முதல் இதழ் சத்தம், முதல் தவழல், முதல் பேச்சு, முதல் நடை எல்லாம் அவர்களாலெ... அன்னை, சகோதரி...

    ReplyDelete
  2. மிக்க நன்றி..!! சகோதரா...,

    ReplyDelete
  3. அன்பின் நன்றிகள் பல....!!

    ReplyDelete

சித்திரையே வருக.,!!

சித்திரையே.., ஏன் விசித்திரமாய் பார்க்கிறாய்..?? 2020 என்று., இறுமாப்புடன் நிமிர்ந்த போது.., உலகமெங்கும் 🌏 கிடைத...