Tuesday, March 5, 2019

புவியோடு பேசுவோமா..,!!!





குயில் கானம் பாடி.,
சேவல் கூவி.,
காக்கை கரைந்து.,
பட்க்ஷிகள் பறந்து.,


சாண முற்றத்தில்..,
கால் தோய்த்து.,
அமைதியான.,
அதிகாலை விடியல்.,


சுத்தம் தந்து.,
சுவாசம் தந்து.,
நெஞ்சம் நிறைத்து.,
கொஞ்சும் புவி...,!!


சிறு தூறல் ரசித்து.,
வானவில் பார்த்து.,
மேனி தழுவ.,
ஓடும் தண்ணீரில்.,


மழையோடு
மனசாரப்பேசி..,
குளித்து, குதூகலித்து.
மறு நாள் விரியும்.,


குடைக் காளானில்.,
முகம் பார்த்து.,
மகிழ்ந்த புவி..,!!


கார் மேகம் காணாது.,
வெப்பக்
கூட்டுக்குள்.,
விதைகள் நசுங்கி..,


நா வறண்டு.,
மேனி வெடித்து..,
மழை என.,


 எழுதிப் பார்த்து., 
வானம் பார்த்து.,
வெம்பும் புவி..,!!


வெறுமை ஓட்டில்.,
கடலை வறுப்பது போல்.,
காய்ந்த வெயிலில்.,
தீய்ந்து தேய்ந்து.,



பச்சை மரங்களை.,
இச்சையாய்.,
எதிர்பார்த்து.,
நிச்சயமாய்., நிர்கதியான..,


நம் வாழ்வை.,
சொல்லாமல்.,
சொல்லும் புவி..,!!


வற்றிப்போன.., 
ஆறுகளும்., 
மூடிப்போன.,
குளங்களும்.,


நெகிழிகள் கடலோடு.,
கலக்கும் அபாயமும்.,
கை பேசிகளின்.,
பரிமாணமும்.,


வாகனப் புகை..,
வளையமும் சேர்ந்து.,
சுவாசம் அற்று.,


நுரையீரல் தேய்ந்து.,
நம்மை பார்த்து.,
கதறும் புவி...,!!


புவியின் கதறலில்
இன்று கடந்து தான்.,
போகிறது.,


கட்டிய அபார்ட்மென்ட்டும்
சேர்த்து   அணைத்த    
செல்பேசியும்.,
ரோஸ் மில்க் பணக் கட்டும்.,
பக்கமிருக்க.,



நாளை நம் தலைமுறை
இருக்குமா...???
புவியின்  வெப்பத்தில்..,!!



                உமா நாராயணன்.(குமரி உத்ரா)

4 comments:

  1. ொஞ்சம் திருத்தம் தேவைப்படுகிறது..

    ReplyDelete
  2. வான் கலந்த நின்கவிதை
    மண்ணலம் காக்கும் பொன்கவிதைக
    இன்னும் அச்சம் தொட கவி படைக்க
    வாழ்த்துக்கள்
    வே,ஆறுமுகவேலப்பன்,,,,,,,

    ReplyDelete

சித்திரையே வருக.,!!

சித்திரையே.., ஏன் விசித்திரமாய் பார்க்கிறாய்..?? 2020 என்று., இறுமாப்புடன் நிமிர்ந்த போது.., உலகமெங்கும் 🌏 கிடைத...