Tuesday, April 11, 2017

மூட நம்பிக்கைகள்..,!!! கட்டுரை - 2

றிவில்லாதவா்களை, மூடர்கள் என்கிறோம். தேவையற்ற பழக்க வழக்கங்களை மூட நம்பிக்கைகள் என சொல்கிறோம்.!

      மூட நம்பிக்கைகள் பல வருடங்களாக., மக்களால் பின்பற்ற பட்டு வருகிறது. பல்லி கத்தினால்., பூனை குறுக்கே ஓடினால்..,

    என பல தரப்பட்ட முரணான விஷயங்களுக்கு  உயிர் கொடுத்து..,மூட நம்பிக்கையாய் வைத்துள்ளார்கள்.

                    இன்னும் சில பேர் பெண் குழந்தைகளுக்கு எருக்கம்பால் கொடுப்பதும்..,குழந்தைகளை நரபலி கொடுப்பதும்.., என அரக்கத்தனமான மூடநம்பிக்கைகளை பின் பற்றி வருகிறார்கள். இப்படிப் பட்ட மூட பழக்கங்களை நாம் தான் பலி கொடுக்க வேண்டும்.அவர்களுக்கு தக்க தண்டனையும் வழங்க வேண்டும்..,!!!

     கழுதைகளுக்கு..,  திருமணம் பண்ணி வைத்தால் மழை வரும். என்ற நம்பிக்கை இன்றும் சில இடங்களில் நடந்து வருகிறது.!

       மொத்தத்தில் நம் முன்னோர்கள்.., சொன்ன பல விஷயங்களை.., நாம் மூடநம்பிக்கைகள் என நினைத்துக் கொள்கிறோம். நல்ல நம்பிக்கைகள் தான் எனத் தெரியாமல்...,,,

     அந்தக் காலங்களில்., புளிய மரங்களில்.., அரச மரங்களில் பேய் இருக்கும். அந்த மரங்களின் கீழே, படுக்க கூடாது. என்பார்கள்.! ஆனால் உண்மை என்னவென்றால் இரவு நேரங்களில்..,அரச மரங்கள், புளிய மரங்கள்.., அதிக அளவு கார்பண்டை ஆக்ஸைடை வெளியேற்றும்.

   இரவில் அம்மரங்களின் கீழே படுப்பவர்களுக்கு அது நோயை உண்டாக்கும். அது ஆபத்தாய் முடியும். என்பதைத் தான் நம்மவர்கள் தவறாக புரிந்து கொண்டார்கள்.!

      காக்கைகள் கரைந்தால்.., வீட்டிற்கு விருந்தினர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையும் முன்பு இருந்தது. அந்தக் காலங்களில், கப்பலை ஓட்டுபவர்கள் காக்கைகளை பிடித்து வைத்திருப்பார்கள். தாங்கள் வரும் பயணங்களில்..,கரைகளை  அவர்கள் தவற விட்டு விட்டால்.., அந்த காகங்களை எடுத்து பறக்க விடுவர். காகங்கள் கரையை நோக்கி பறக்கும். உடனே அதை பின் தொடர்ந்து.., மாலுமிகள் கப்பலை செலுத்துவர், கரைகளை நோக்கி...,

  காகங்கள் ஊரில் வந்து கத்த தொடங்கியதும்.., கரையில் இருப்பவர்கள்.., யாரோ விருந்தாளிகள் வருகிறார்கள் என முடிவு செய்வார்கள்.!!

       மிருகங்கள் கத்தினால் ஊருக்கு ஏதோ ஆபத்து வரப்போகிறது என சொல்வார்கள் பெரியவர்கள்..,உண்மையில் மிருகங்கள் கத்தினால்..,பெரிய விபரீதங்கள் நடக்க போகிறது என அர்த்தம். நில நடுக்கங்கள், சுனாமி போன்ற பேராபத்துக்கள் வருவது மிருகங்களுக்கு முன் கூட்டியே தெரிய வரும். எனவே தான் அவைகள் ஒலி எழுப்பும்.!!

    பூனை குறுக்கே வந்தால்.., அது ஆபத்து என்பார்கள்.  முந்தைய காலங்களில் ராஜாக்கள் போருக்கு செல்லும் போது..,செல்லும் வழிகளில் பூனை குறுக்கே வந்தால்..,அந்த இடத்தில் மக்களின் குடியிருப்புகள் இருப்பதாக நினைத்து தன் படைகளை வேறு வழியாக வழி நடத்தி செல்வார்கள். ராஜாக்கள்.!!

 ஆனால் நம்மவர்கள் அதையும் தவறாக புரிந்து கொண்டார்கள்.!

      நம்பிக்கைகளில் நல்லதும் இருக்கிறது. தீயதும் இருக்கிறது.., நாம் தான் நம் வாழ்க்கைக்கு தேவையான நல்ல விஷயங்களை  எடுத்துக் கொள்ள வேண்டும்.! தீயவைகளை தவிர்க்க வேண்டும்...,!!!


                           உமா நாராயண், (குமரி உத்ரா) 

No comments:

Post a Comment

சித்திரையே வருக.,!!

சித்திரையே.., ஏன் விசித்திரமாய் பார்க்கிறாய்..?? 2020 என்று., இறுமாப்புடன் நிமிர்ந்த போது.., உலகமெங்கும் 🌏 கிடைத...