உலவும் உற்சாக முகங்கள்.,
ஊஞ்சலாய் தாலாட்டும் முகங்கள்..,!!
முக.., வரிகளை மறக்க முடியாமல்..,
முகவரி தேடிச் சென்று..,
முறுவலிக்கும் வெள்ளை முகங்கள்..,!!
பொய் முகங்கள்..,போலி முகங்கள்..,
போகின்ற வழி தோறும்..,
நெருடும் சில பொருந்தாத முகங்கள்..,!!
களவு முகங்கள்..,கருப்பு முகங்கள்..,
கசடு முகங்கள்..,இருளுக்குள்ளே..,
இடறும் வௌவால் முகங்கள்..,
இனியும் காண விரும்பாத சகதி முகங்கள்..,!!
வழியெல்லாம் முட்கள் போல.,
பல முகங்கள் முகவரி தந்தாலும்..,
வாசமிகு ரோஜாவைப் போல்.,
நல் முகங்களை நலம் காணுங்கள்..,!!
எத்தனை.., எத்தனை முகங்கள் பார்த்தாலும்..,
கர்ப்பத்தின் கைக்குள்ளே ..,
நாம் இருந்த போதே..,
இதழோரம் சிரிப்போடு ..,!!
இறைவன் தேர்ந்தெடுத்த..,
இரு முகங்கள்..,
தாய், தந்தை எனும் அன்பு முகங்கள்..,
போலி கலக்காத பொக்கிச முகங்கள்..,!!!
இல்லாளுடன் இணக்கமாகி..,
புதிதாய் ஒரு முகம் காண..,
பூரிப்புடன் காத்திருக்க..,!!
பூத்த புது மலர்கள் போல..,
மகன், மகளாய்..,
பாச முகங்கள்..,
நமக்காகவே இறைவன் அளித்த..,
வரப் பிரசாதங்கள்..,!!!
உமா
நாராயணன், (குமரி உத்ரா)
No comments:
Post a Comment