Thursday, May 4, 2017

ஹைக்கூ குறும்பாக்கள் - 2

தன்னை இழந்து தன்னருகில் இருக்கும்..,
இருளை நீக்கும்..,
மெழுகுவர்த்தி..,!


அவள் தூண்டில் கண்களில் மாட்டிய..,
சின்னஞ்சிறு  மீன்..,
என் இதயம்..,


காற்றின் நதியில்..,
நீந்திக் கொண்டிருக்கிறது..,
உதிர்ந்த இலை..,!!


பொம்மையோடு, இன்னொரு பொம்மையாய்..,
விளையாடிக் கொண்டிருக்கிறது..,
தாய் பொம்மை.., குழந்தை..,!!


யாதுமாகி நின்றாள் பெண்..,
தாய், மனைவி, மகள்,
குழந்தை..,


          உமா நாராயண்,(குமரி உத்ரா)

No comments:

Post a Comment

சித்திரையே வருக.,!!

சித்திரையே.., ஏன் விசித்திரமாய் பார்க்கிறாய்..?? 2020 என்று., இறுமாப்புடன் நிமிர்ந்த போது.., உலகமெங்கும் 🌏 கிடைத...