கதிரவன் இல்லையென்றால்,
உலகும் ஒளிபெறுமோ....??
அவளும் இல்லை தான்..,
களையிழந்து போனது என் வீடு ..!!
அவள் விட்ட சுவாசக் காற்றும்.,
அடுக்கி வைத்த உயிரற்ற பொருட்களும்.,!!
தடுமாறி நிற்கிறது..,
எங்கள் வெள்ளை தேவதையை தேடி..,!!
வகிடெடுத்த தலையில்..,
அழகுச் சுருள் முடியும்..,!!
அளவாய் விட்ட குங்குமமும்.,
சின்ன கருவிழியில் கனிவும்..,
கம்பீரமும்.,!!
சிதறிய சிரிப்பில் மீனாட்சியின் வசீகரமும்.,
ஒரு சின்ன உலகத்தையே...,
சிருஷ்டித்த.,பிரம்மா அவள் ...!!
அவள் உதிர்த்து விட்ட..,
நானிருக்கிறேன்..,
அவளில்லை.,!!
இளையவள் எனக்கு..,
பாசத்தை தந்து..,பரிதவிக்க விட்டு..,
பறந்து விட்ட என் அம்மா..!!
இன்னும் கைக்குழந்தையாய்..,
நானிருக்கிறேன்.,
கை பிடிக்க வா அம்மா...!!
என் உணர்வுகளில் கலந்து .,
நீ உயிரோடு இருக்கிறாய்..,
அம்மா..!!
உருகும் மெழுகாய்..,
உருகுகிறேன்.,
இன்னொரு உதயமாய் வா அம்மா..!!
உலக பெண்மணிகள் பலருண்டு..,
உலகம் உரைக்கிறது ..,!
இருந்தால் தான் என்ன...??
இதயம் நிறைய நீ
தாயாய்..,
நான் சேயாய்...,
நிறைந்து.., இருக்கும் போது...!!!
உமா நாராயண்,(குமரி உத்ரா)
No comments:
Post a Comment