Friday, December 15, 2017

நாளையை எதிர்பார்த்து..,!!!



பூக்கள் இன்றே..,
மலர்ந்து விட்டேன் என ..,
பூரிப்பாய் புன்னகைக்கின்றன..,!!

மொட்டுக்கள் நாளை..,
மலர வேண்டும் ,
முட்டி முட்டி இதழ்களை பிரிக்கின்றன..,!!

இலைகள் நாளையை..,
எதிர்பார்த்து,
பச்சையாய் படபடக்கின்றன..,!!

தளிர்கள் நாளை..,
நாம்தான் என
தாகத்தோடு அரும்புகின்றன..,!!

மகரந்தங்கள் வண்டினங்களையும்..,
வண்ணத்து பூச்சியையும்,
வம்புக்கு  இழுக்கின்றன..,!!

கிளைகள் நாற்த்திசையும்..,
எனக்குத்தான்.,
காற்றோடு கலகலக்கின்றன..,!!

இவையேதும் அறியாமல்..,
இன்றே வீழ்ந்தாலும்..,
அது உன்னோடுதான் ..,!!

வேர்கள் நிலத்தின்..,
கைப்பிடித்து
நிம்மதியாய் உறங்குகின்றன..,!!!

                 உமா நாராயண், (குமரி உத்ரா)     

No comments:

Post a Comment

சித்திரையே வருக.,!!

சித்திரையே.., ஏன் விசித்திரமாய் பார்க்கிறாய்..?? 2020 என்று., இறுமாப்புடன் நிமிர்ந்த போது.., உலகமெங்கும் 🌏 கிடைத...