நான் இளைத்த..,
புள்ளிகளும்..,
கோலங்களும்..,
கம்பிக்
கோலங்களாய்..,
புதிரிலிருந்து
வெளிவராது.,
எதையோ
எதிர்பார்க்க..,
இறைவனும் மெல்ல..,
இதழ்
விரிக்க..,
என் வாழ்க்கை...,
புதிரான கம்பிக்
கோலமா..,??
வண்ணமயமான..,
ரங்கோலிக்
கோலமா..,??
தெரியாமலேயே..,
என் விரல்கள்..,
மீண்டும்..,மீண்டும்..,
இளைக்கிறது..,
புள்ளிகளையும்..,
கோலங்களையும்...,!!
உமா நாராயண்,(குமரி உத்ரா)
No comments:
Post a Comment