Monday, May 22, 2017

மழலைப்பூ.., _ சிறுகதை..,!!

                              

                          குடிசையின் வாசலில், வாயில் செருகிய பீடியோடு உட்கார்ந்திருந்தான் மாரிமுத்து.டேய்….மாரி.. உனக்குக் குழந்தைப் பிறந்திருக்காமில்லே….? எனக்கு இனிப்பு தரமாட்டியா..”? என்று கேட்டபடியேவந்தான்வேலு.

       “அடப்போடாமுந்திதான் இரண்டு பொம்பிளைப்பிள்ளை இருக்கே…? இது  பையனா இருக்கும்னு நினைச்சேன்! ம்ஹிம்.. சலித்துக் கொண்டான்  மாரி!
          “என்ன மாரி சலிச்சுக்கிறே…? உனக்குப் பிடிக்கலையா…?”
                “பின்னே என்ன…? இந்த காலத்திலே ஒண்ணைக் கரையேத்துறதுக்குள்ளே அவனவன் படுற பாடு..!”  அதுக்குள்ளே…..இந்த ஆண்டவன் என்னைச் சோதிக்கிறான் பாருடா..?
                மாரி, நான் ஒண்ணு சொன்னா கோவிச்சுக்கமாட்டியே”? என்ன வேலு…? சொல்லு….அடசொல்லுப்பா…? மாரி.
                “எனக்குத் தயக்கமாயிருக்கு மாரி  வார்த்தைகளை மென்றான் வேலு!
                “சொல்லு வேலு!”  மாரியின் அதட்டலில், “தங்கச்சி உள்ளே வேலையா இருக்கா ..? என்றான்!
                “அடஅவ பிள்ளைங்க கூட விளையாடிட்டு இருப்பா!  நீ சொல்லுடா வேலு .
                “நம்ம பண்ணையார் வீட்டிலே பணம் இருக்கு !  வசதி இருக்கு…!  ஆனாஅவங்களுக்குக் குழந்தைப் பாக்கியம் இல்லை.  ஆதனால..ரொம்ப வருத்தப்படறாங்க இவ்வளவு சொத்து பத்து இருந்து எதுக்கு…? கொஞ்சறதுக்கு ஒரு குழந்தை இல்லையே…?  அதான் ஒரு குழந்தையைத் தத்து எடுக்கப் போறாங்களாம்…..அதனாலே….

                “அதனாலே..என்னடா பீடிகைப் போடுறே..? என்றான் மாரி!  ஒருமுறை வீட்டிற்குள் எட்டி பார்த்து விட்டு, “இந்த குழந்தையைத் தத்து குடுத்திட்டா என்னடா….?  தலையைச் சொறிந்தான் வேலு.

                “டேய் என்னடா சொல்றே…?”  ஆவேசமானான் மாரி.
                “இப்போ ஊருல, உலகத்துலே நடக்காததையா சொல்றேன்அவனவன் குழந்தையை அனாதை இல்லத்திலேயும், குப்பைத் தொட்டியிலேயும் வீசி எறிஞ்சிட்டு போறான். பிள்ளையைத் தத்து குடுத்தா.. பத்தாயிரம் பணம் தருவாங்களாம்.  இப்படி கஷ்டப்பட வேண்டாம்.  அந்த பணத்திலே….ஒரு ஆட்டோ வாங்கி பாட்ஷா மாதிரி பறக்கலாண்டா….என்றான்.
               “நெஜமா வேலு…? பத்தாயிரம் தருவாங்களா…? என்றவனின் விழிகள் வியப்பால் விரிந்தது.

         “பின்னே….சும்மாவா சொல்றேன்.  உன் பிள்ளையும் பெரிய வீட்டிலே ராணி மாதிரி வளருவா! நீயும் கால்பட்டினி, அரைபட்டினியை விட்டு வயிறு நிறைய சாப்பிடலாம்.என்ற வேலுவின் வார்த்தைகள் மாரியின் மனதில் மெல்ல வேர் விட ஆரம்பித்தது
.
       “இந்த பொட்ட பிள்ளையை போட்டுட்டு அவதிப்படுறதை விட, இது நல்ல யோசனைதான்!  ஆனா தேவகி சம்மதிக்கணுமில்லேஎன்றான் மாரி.
      நீ தங்கச்சிகிட்டே சொல்லி சமாதானபடுத்து!  மற்றதை நான் கவனிச்சுக்குறேன்.  காவி பற்கள் தெரிய சிரித்தபடி வெளியேறினான் வேலு!

          மாரிமுத்துவுக்கு இந்த யோசனைப் பிடித்திருந்தது.  எத்தனை பிள்ளையிருந்து என்ன….?  அதற்கேற்ற…..வசதி இருக்கணும்! இந்த பிள்ளை மாடி வீட்டிலே போய் மனம்போல வாழட்டுமே..? பத்தாயிரம் ரூபாய்க்கு ஒரு ஆட்டோ வாங்கினா நல்லா சம்பாதிக்கலாம்.”  தேவகியைச் சமாதானப்படுத்த வார்த்தைகளைக் கோர்வையாக்கி கொண்டான்.

     தேவகியோ.., யோவ்.., "நீ ஒழுங்கா வீட்லே இருக்கிறியன்னா இரு! இப்படி ஏதாவது திட்டம் போட்டே? நான் பிள்ளைங்களோட எங்கேயாவது போயிடுவேன்நாம செய்த தப்புக்கு இந்த பிஞ்சு என்னய்யா செய்யும்..? உனக்குக் குழந்தைன்னா இளக்காரமா போச்சா..? அவங்களுக்குக் குழந்தை வேணும்னா தாய், தகப்பன் இல்லாம ஏங்கிட்டு இருக்கிற எத்தனையோ குழந்தைகளுல.,.. ஒண்ணை எடுத்து வளர்க்கட்டும்! அவள் தீர்மானமாய் சொல்லி சென்றாள் மாலதி.. நீ இன்னும் பள்ளிகூடத்துக்குப் போகலியா..?” மாரியிடம் உள்ள கோபத்தில் முதல் பெண்ணிடம் எரிந்து விழுந்தாள்.

     மத்தியான வெயிலில், பசியோடு கயிற்றுக் கட்டிலில் சாய்ந்திருந்தான் மாரி! யோசனையில் ஆழ்ந்திருந்தவனை ஒரு கரம் மெல்ல தட்டியது.

                    திரும்பி கவனித்தான், மூத்த பெண் மாலதி கையில் மூடிய பாத்திரத்தோடு நின்றிருப்பதை கண்டு முகம் சுருக்கினான்.என்னடி கையிலே…?” கேட்டபடியே உள்ளிருந்து வந்தாள் தேவகி! அம்மா, பள்ளிக்கூடத்திலே மதிய சப்பாடு தந்தாங்க! அதை அப்படியே வீட்டுக்குக் கொண்டு வந்திட்டோம் அப்பாவும், நீயும் சாப்பிடுங்கம்மா! கயிற்று கட்டிலில் வைத்து, நிமிர்ந்தாள் மாலதி!
   தன் முன் இருந்த தட்டை பார்த்தவன் பசியால் சாதத்தை அவசர அவசரமாக வாயில் திணித்தான்! அவன் அவசரமாக சாப்பிடுவதை வெறுப்பாக பார்த்தாள் தேவகி.

                “அந்த புள்ளைங்களுக்கு நம்ம மேலே இருக்கிற அன்பைப் பாத்தியா வீட்டிலே ஒரு படி அரிசி இல்லே! அது தெரிஞ்சதும் தனக்குக் கொடுத்த சாப்பாட்டை நமக்குக் கொண்டுவந்து தருது” “யோவ்.. இந்த குடிசையிலே பணம் வத்தி போயிருக்கலாம்! ஆனா.. பாசம் வத்தி போகல்லய்யா..,!!  இப்போவறுமைதான் வாழ்க்கையாயிருக்கலாம்.. ஆனா, அதுவே நிரந்தரமான உண்மை இல்லைய்யா

                “இந்த வயசிலே, இந்த மனம் இருக்கிற புள்ளைங்க, நாளைக்கு நம்மை நல்லா கவனிக்காதுன்னு நினைக்கிறியா..? நமக்குப் பெண் குழந்தை இருக்கேன்னு நீ கவலைப்படுறே..! நான் பெருமைப்படுறேன்..!

    தேவகி.. என்னை மன்னிச்சிடு? பத்தாயிரம் ரூபாய்க்காக என் பொண்ணையே கொடுக்க நினைச்சேன். நான் இப்போ திருந்திட்டேன் தேவகி.  மூணு பிள்ளைங்களையும்  மூன்று வழிகளிலே நானே, எல்லோரும் பாராட்ட வளர்ப்பேன் தேவகி.., குரல் கனக்க சொன்னான் மாரி!.
                தொட்டிலில், புதுப்பூவாய் தூங்கி கொண்டிருந்த மழலையை தூக்கி அதன் இதழ் ஓரத்தில் இதமாய் விரிந்த அந்த பொக்கை வாய் புன்னகையைப் பார்த்து, “உன்னோட பத்தாயிரம்என் பொண்ணோட இந்த ஒரே ஒரு புன்னகைக்கு போதுமாய்யா..?? குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டாள். தேவகி.
 
                      உமா நாராயண்,(குமரி உத்ரா,)

                                      

7 comments:

  1. Excellent story Uma. Keep it up.

    Babu

    ReplyDelete
    Replies
    1. நெஞ்சம் நிறைந்த நன்றிகள் அண்ணா.

      Delete
  2. தளிர் துளிரத்து மரமாகும்
    பிற்காலத்தில் நிழல் தரும் வரமாகும்
    ஒரு விதை ஒரே மரமாகும்
    ஒரு மரமோ பல விதைகளாகும்
    உங்களின் கதை போல ....
    அருமை ... மரம் காப்போம்...

    ReplyDelete

சித்திரையே வருக.,!!

சித்திரையே.., ஏன் விசித்திரமாய் பார்க்கிறாய்..?? 2020 என்று., இறுமாப்புடன் நிமிர்ந்த போது.., உலகமெங்கும் 🌏 கிடைத...