Friday, February 10, 2017

கனவுகளில் கசியும் குருதி...,!! (கவியருவி இதழில் இரண்டாம் பரிசு பெற்ற கவிதை)






நாளை மலர..,இன்றே முதல் இதழை விரிக்கும்..,
ஒற்றை ரோஜாவின்..,
ஓராயிரம் ரகசியம் போல..,
பூ பூக்கும் ஓசைகள் தான் காதல்..,!!

மல்பரி மரத்து மகோன்னத சிறப்புகள் போல..,
நாளைய சந்தோசம் தந்து..,
இன்றே..,சாகத் துணிந்த..,
பட்டு புழுக்களின் காதல்கள்..,!!

சிலந்தி வலையாய்..,அதில் ஒட்டியுள்ள ஈயாய்..,
பறக்கவும் முடியாமல்.., 
விழவும் முடியாமல்..,
பரிதவிக்கும் பல காதல்கள்..,!!

இதய நாணிலிருந்து விடுபட்டு..,விழிக்குளத்தில்..,
தவறி விழுந்து பார்வை அம்புகளை..,
பரவசமாய் சேர்த்து வைக்கும்..,
பருவக் காதல்கள்..,!!

கனவுகளை நெஞ்சத்தில்..,செதுக்கி.., பதுக்கி..,
காயப்பட்டு விளக்குகளில்..,
தவறி விழுந்த..,
விட்டில் பூச்சிகளின் காதல்கள்..,!!


கசிந்து உருகும் குருதி மழையாம் காதல்..,!!
நித்தம், நித்தம் பூக்கிறது..,
சில குருதிகளை சிந்தி..,
சில குருதியை கண்களில் தேக்கி..,


சில குருதிகளில்..,குளித்தாடி..,
பல குருதிகளில்.., கூத்தாடி..,
காதல், காதல் இல்லையேல்...,???

              
           உமா நாராயண், (குமரி உத்ரா)
                     


No comments:

Post a Comment

சித்திரையே வருக.,!!

சித்திரையே.., ஏன் விசித்திரமாய் பார்க்கிறாய்..?? 2020 என்று., இறுமாப்புடன் நிமிர்ந்த போது.., உலகமெங்கும் 🌏 கிடைத...