நிறத்தில் என்ன கண்டாய்..,??
நிஜத்தை சொல்லு மனிதா..,??
சீதையின் சிறப்புகளையும்..,
கண்ணகியின் கற்பு நெறியையும்..,
காவியங்களில் காண்கிறோம்..,
கண்களில் ஒற்றிக் கொள்கிறோம்..,!!
இதிகாசங்களை மதிக்கிறோம்..,
இங்கே.., எத்தனை சீதைகள்..,
ஸ்ரீ ராமன்களுக்காக காத்திருக்கிறார்கள்..,??
தட்சணை கேட்கும் பண பேய்களுக்கு..,
தீனி போட்டு விடலாம்..,!!
கருப்பு என்றால் வெறுப்பாகும் ..,
மனிதர்களுக்கு என்ன கொடுப்பது..,??
வெள்ளாவி வைத்தால் தான் பெண்கள் அழகு..,
என்று எந்த பிரம்மன் எழுதி வைத்தான்..,!!
கருப்பு என்றாலும் திரும்பி பார்க்கும்..
ஆழகு..,அங்கே..,!!! திறமையை பார்..,!!
சாதிக்கும் பெண்களை பார்..,!!
அப்போது உண்மை புரியும்..,
அக.., அழகு தான்..,
நிஜத்தில்.., அழகு என்று...,!!
உமா நாராயண்(குமரி உத்ரா)
No comments:
Post a Comment