Saturday, February 18, 2017

கவிதையும் ..., காதலும்..,!!!

   




கவிதைகள் இல்லா..,காதலுமில்லை..,
காதல் இல்லாத..,கவிதைகளுமில்லை..,!!
காதலை எழுதாத..,கவிஞனுமில்லை..,
கவிஞனுக்கு..,காதல் தீரா தொல்லை..,!!

மூங்கிலி்ல் காதல் கொண்டு..,
தென்றல் புல்லரிக்கும்..,புல்லாங்குழலாய்..,
கவிதை இசை படைக்கவில்லையா..,??


இலக்கை தேடி விரையும்..,பறவையின் ஒற்றை சிறகு..,
காற்றோடு கை கோர்த்து..,பரந்த வானில் பறந்து..,
கவிதை ஒன்று படைக்கவில்லையா..,??


மரங்கொத்தி பறவைகள் போல..,
காதல் மனம் கொத்தி போக..,கவிதைகளும்..,
இதமாய் இறகு விரிக்கிறது..,!!


காற்றோடு கை சேர்க்கும்..,இலவம் மரத்து பஞ்சு போல..,
கை குலுக்கி வரவேற்கிறது..,
காதலும்.., பக்கத்து வீட்டு கவிதையும்..,!!


மூழ்கிபோன கப்பலில்..,மூழ்காத சிந்தனைகளோடு..,
வண்ணக்கலவை மீன்கள்..தூண்டிலையும் ஊஞ்சலாய்..,
சில நேரம் நினைப்பது.,காதல் என்னும் கவிதைக்கு..,!!


சிலந்தி வலையாய் காதல்..,அதில் ஒட்டியுள்ள ஈயாய்..,
பறக்கவும் முடியாமல்.., விழவும் முடியாமல்..,
பரிதவிப்பது கவிதைகள்..,!!


வில்லின் நாணிலிருந்து..,கவிதை எனும் அம்பெய்தும்..,
அடங்க மறுக்கும் சில..,தாகம் தீரா காதல்கள்..,!!
காதலுக்கும் அழிவில்லை..,கவிதைகளுக்கும் ஓய்வில்லை..,!!


காதல்கள் ஒன்றிணைந்து...,
புது ஜனனத்தை உருவாக்கி தருகிறது..,!!
கவிதைகள் ஒன்றிணைந்து..ஜனனங்களின் இதயங்களை..,
கொள்ளை கொள்கிறது...,!!


காதலுக்கோ.., ஆயுளில்லை..,!!!
அதனால் கவிதைகளுக்கும்..,
மரணம் இல்லை...,!!!


               உமா நாராயண், (குமரி உத்ரா)

3 comments:

  1. நன்றி. தங்களது விமர்சனம் எங்களை வளர செய்கிறது...!!

    ReplyDelete

சித்திரையே வருக.,!!

சித்திரையே.., ஏன் விசித்திரமாய் பார்க்கிறாய்..?? 2020 என்று., இறுமாப்புடன் நிமிர்ந்த போது.., உலகமெங்கும் 🌏 கிடைத...