Wednesday, January 11, 2017

வரவேற்பு ...,!!


பூத்தது புது ஆண்டு..,

வரவேற்போம் வாசல் தோறும்..,

இவ்வினிய ஆண்டு..,!!


பன்னிரண்டு இதழ்களிலும்..,

வண்ணங்களும்., வாசங்களுமாய்..,

நம்மை வரவேற்குது..,வசந்தமாய்..,

இவ்வினிய ஆண்டு..,!!


பூத்தது புது ஆண்டு..,

வரவேற்போம்.,சிவப்பு கம்பளம் கொண்டு..,

பூமித்தாயின் செல்ல மகனாய்.,

தாயின் விரல் பிடித்து..,


தத்தி நடை நடந்து..,

தரித்திரத்தை உள்ளங்கை தூசியாய்..,

ஊதி தள்ள வந்த..,உன்னத ஆண்டு..,!!


பூத்தது புது ஆண்டு..,

வரவேற்போம்..,!!

வானுயர மனம் கொண்டு..,வளங்கள்

வாசல் தோறும் பாய் விரிக்க..,


மனவானில் மகிழ்ச்சி..,

பறவைகளை பறக்க விட..,

வரவேற்போம் இந்த..,

மகோன்னத ஆண்டு..,!!


பூத்தது புது ஆண்டு..,வரவேற்போம்..,!!

பல்லாயிரம் கரங்கள் கொண்டு..,

பரண்களில் படுத்து உறங்கும்..,

சில மர்ம பூனைகளின்..,


முகத்திரைகளை  கிழித்து..,

புது முகவரிகளை..,

அறிமுகபடுத்தும் என..,

ஊரெங்கும் எதிர்பார்க்கும் ஆண்டு..,!!


வரவேற்போம் விசேசமான ஆண்டு..,!!

வர்ணம் இழைக்கும்.., புது கனவுகளை..,

புதிராய் ஒளித்து வைத்திருக்கும்..,


பொக்கிஷ புத்தாண்டே..,

வரவேற்கிறோம்..,வருக..,வருக.,

பொங்கிய எம் மனங்களை..,

இளநீராய் தணிக்க..,!!!


                      
            உமா நாராயண்,(குமரிஉத்ரா) 

    

No comments:

Post a Comment

சித்திரையே வருக.,!!

சித்திரையே.., ஏன் விசித்திரமாய் பார்க்கிறாய்..?? 2020 என்று., இறுமாப்புடன் நிமிர்ந்த போது.., உலகமெங்கும் 🌏 கிடைத...