Sunday, January 29, 2017

என்னுயிர் தோழி ..,!!

பள்ளிக் காலங்களில்..,
பதிய மிட்டோம்  நம் நட்பை..,!!

கல்லூரி காலங்களில்..,
சில காலம் களவு கொடுத்தோம்..,!!

கால சூழ்நிலையில்..,மீண்டும் ..,
துளிர் விட்டது நம் நட்பு..,!!

கல்யாண காலங்களில்..,மொட்டு ..,
விட்டு மலர வைத்தோம் நட்பை..,!!

புது அறிமுகங்களுக்கு..,
நம்மை புரிய வைத்து .., நாமும் புரிந்து..,!!

ஆலாய் வளர வைத்து..,
ஆலில் சில விழுதுகளாய்..,!!

விரிந்து பரந்து..,
நம் குழந்தைகளுக்கும்..,!!

நம் நட்பை.., எடுத்துக்காட்டாய்..,
புரிய வைத்தோம்..,!!

தோழி..,
நாளை.., நம்..,பேரக்குழந்தைகளுக்கும்..,
தெரியும் நம் நட்பு..,!!

                                         உமா நாராயண்(குமரி உத்ரா)

No comments:

Post a Comment

சித்திரையே வருக.,!!

சித்திரையே.., ஏன் விசித்திரமாய் பார்க்கிறாய்..?? 2020 என்று., இறுமாப்புடன் நிமிர்ந்த போது.., உலகமெங்கும் 🌏 கிடைத...