கைக்குள் ஒரு உலகம்.., !!
விரல் நுனிகளில் ஒரு வித்தை..,!!
விரல் நுனிகளில் ஒரு வித்தை..,!!
முக.., வரியை பார்க்காமல்..,
முகவரியோடு விரல் குலுக்கும்..,,
விளையாட்டு மைதானம்..,!!
கண் விழிக்கும் போதே..,
கச்சேரி களை கட்ட..,
கண்ணாம் பூச்சி விளையாட்டில்..,
கண்ணோடு கைகுலுக்கும் உற்சாகம்..,!!
செல்லினத்திலும்., ஆங்கிலத்திலும்..,
அச்சு கோர்க்கும் ஒரு அடையாளம்..,!!
வார்த்தை சித்திரங்களை ..,செதுக்கி..,
புடம் போட்டு,..,அனுப்பும் அசையா கல்வெட்டு...,!!
எழுத்தெனும் விதைகள் விதைத்து..
வார்த்தைகளை..,பதியமிட்டு..,
சிறுதுளி.., பெரும் துளியாய்.
சொல்மழையை அனுப்பி தரும்..,
ஆகாய மேகமிது..,இந்த அடங்கா புலரி..,!!
சில நேரம் இளைப்பாற..,
சில நேரம் கதை பேச..
சில நேரம் காயங்கள் ஆற்ற..,
பல உதவிகளும் முத்தாய் தரும்..,
சொத்தாய்.., தைத்தாய்.., எங்கள் மனதை..,
விரலுக்குள் வித்தாய் ஒளிந்திருக்கும் புலரி..,!!
கொஞ்சம் இளைப்பாரி பாருங்கள்..,!!
எத்தனை வயதே ஆனாலும்..,
தட தடக்கும் தட்டானாய்..,,,
பட படக்கும் வண்ணத்துப் பூச்சியாய்..,
நீங்களும் இந்த பூங்காவனத்தில்..,
பாதம் பதிக்க வருவீர்கள்..,!!
புது உலகத்தை சிருஷ்டிப்பீா்கள்..,!!!
உமா நாராயண் (குமரி உத்ரா )
No comments:
Post a Comment