Thursday, January 19, 2017

முயற்சி திருவினையாக்கும்....!!


றிக்கப்பட்டது..,எங்கள்.,
பாரம்பரியத்தின்
அச்சாணிகள்..,!!

பறிக்கப்பட்டது.., எங்கள்..,
இயற்கையின்..,
வரங்கள்..,!!

பறிக்கப்பட்டது..,எங்கள்..,
விவசாயத்தின்
ஆயுள்கள்..,!!

பறிக்கப்பட்டது.., எங்கள்..,
ஆவினங்களின்
சுவாசங்கள்..,!!

பறிக்கப்பட்டது..,எங்கள்..,
வீரத்தின்  அடையாள
விளையாட்டுகள்..,!!

பறிக்கப்பட்டது.., எங்கள்
தமிழனின்..,
தலையெழுத்துக்கள்..,!!

வீறு கொண்டு எழுவோம்..,
விதியை வீதியில்..,
விளையாட  விடுவோம்..,!!

எதிரிகளுக்கும் எரிச்சல் வருகிறது..,
இளைய தலைமுறைகள் விழிக்கும் ..,
முறைக்கண்டு..,!!

பல விதைகள்.., மண்ணுக்குள்..,
மடங்காமல்..,
வெடித்து கிளம்பும் ஒலிகள் கேட்டு..,!!

இளையவர்களின் இரும்பு நெஞ்சில்..,
உறுதி எனும் உத்வேகம்..,
பிறந்ததே என்று..,!!

நிமிர்ந்து நில் மானிடா..,!!
முயற்சி திருவினையாக்கும் ..,
பெரியவர்கள் சொன்னார்கள்..,!!

இதோ..,முயற்சி ஒன்று..,
திரு  விளை..,யாடலாக ., நடந்து..,
கொண்டிருக்கிறது..,!!

திரு வினையாகும் என்ற..,
நம்பிக்கையில் ..,!!

விருட்சங்கள் வீதிகளில்..,
வியூகம் நடத்துகிறது..,!!

விண்மீன்கள் போருக்கு ..,
தயாராகி கொண்டிருக்கிறது..,!!

மேகங்கள் உலக மைதானத்தில்..,
யாக ஊர்வலம் நடத்துகிறது..,!!

நம்பிக்கை வெண்ணிலா..,
கையில் கிடைக்கும் என்று..,!!

நாளை ஒரு புதிய உலகம்..,
வாசல் திறக்குமென்று ..,!!

                                   
                  உமா நாராயண் (குமரி உத்ரா)


No comments:

Post a Comment

சித்திரையே வருக.,!!

சித்திரையே.., ஏன் விசித்திரமாய் பார்க்கிறாய்..?? 2020 என்று., இறுமாப்புடன் நிமிர்ந்த போது.., உலகமெங்கும் 🌏 கிடைத...