தோல்வியை நேசிக்கிறேன்.,
வெற்றியின் மந்திரத்தை..,
சொல்லி தருவதால்..,!!
பூக்களுக்கும் வியர்க்கிறது.
கை நீட்டி துடைத்தான்..,
ஆதவன்.., பனித்துளிகள்..,!!
தொட்டாற் சிணுங்கியாய்..,
வந்து தொடும்..,
விழி மலர்ந்தால் விலகி போகும்..,
கனவு..,!!
நாங்கள் வீழ்வது ..,
எழுவதற்கு..,நாங்கள்..,
எழுந்து விட்டோம்..,
நீங்கள்..,?? விதைகள்..,!!
பாதைகளில்..,
கையேந்தும் பூக்கள்..,
குழந்தை யாசகர்கள்..,!!
வருடும் காற்று..,
உள்ளே புழுக்கம்..,
சுண்டல் பையன்..,!!
மௌனங்களின்..,
பனிக்குடம் உடைந்து..,
ஓசைகள் உயிர் பெற்றது..,
கொலுசொலி..,!!
எனக்கு உன்னை பிடிக்கும்..,
உனக்கு என்னை பிடிக்குமா..,??
இருந்தும் உன்னை..,
பின் தொடர்ந்து.., நான்
மரணம்..,!!
தோல்வியின்..,
முற்றுபுள்ளி..,
வெற்றி..,!!
உமாநாராயண்,(குமரி உத்ரா)
No comments:
Post a Comment