இறந்த காலங்கள்..!!
என் இறந்தக்காலம்..,அவள்..,
கைப்பிடித்து., நான்..,
நடந்து பார்த்தபோது..,!!
என் இறந்தகாலம்.., அவள்..,
நிலவை பிடித்து தருவதாக..,
அன்னம் தந்த போது..,!!
என் இறந்தகாலம்..,அவள்..,
என்னை பள்ளிக்கு அனுப்பி..,
நான்அழும்போது., மறைந்து பார்த்தது.,!!
என் இறந்தகாலம்.,நான்.,
மணமுடித்து போகும் போது.,
அவள் அழுது பார்த்தது.,!!
என் இறந்தகாலம்.,அவள்.,
என் குழந்தையின்.,
குறும்புதனங்களை ரசித்து பார்த்தது.,!!
ஆம்..,இறந்தகாலம்.,
என் தாயை., நான் மறுபடியும்.,
இப்படி பார்ப்பது.,!!
உமா நாராயண்,(குமரி உத்ரா)
No comments:
Post a Comment