விழி மீன்களை பார்த்து.,
விண் மீன்கள் சொக்கிப்போயின.,!!
வளைந்த புருவங்கள் பார்த்து.,
வானவில்லும் வியந்து போனது.,!!
செவ்விதழ் தந்த மந்திர புன்னகையில்.,
மாதுளம் பூக்கள் மயங்கி கிடந்தன.,!!
நுனி மூக்கின் அழகில்.,
மகிழம் பூக்கள் மனமொடிந்து போயின.,!!
காது மடலின் காவியத்தில்.,
காதோரம் செருகும் பட்டு ரோஜாக்கள் தலை கவிழ்ந்தன.,!!
விரலழகின் வீழ்ச்சியில்.,
பன்னீர் பூக்கள் உடைந்து போயின.,!!
பாத அழகில் பவளமல்லிகைகள்.,
பாத யாத்திரை போயின.,!!
மொத்தத்தில்.,
வெண்ணிலவு தற்கொலைக்கு போயிற்று.,!!
அன்று..,
புதிதாய் பிறந்த மழலைப் பூவைப்பார்த்து.,!!
உமா நாராயண்,(குமரி,உத்ரா)
No comments:
Post a Comment