Monday, December 19, 2016

என் மகன்..!!!

குளிர் நிலவு..,
குளிப்பாட்டியது இருளை.,!!

நட்சத்திர மீன்கள்.,
நடை பயின்றது வானக்கடலில்.,!!

இரவோடு இரவாய்.,
மறைந்திருந்து எட்டி பார்த்தது.,
அவன் நினைவு.,!!

என் அணைப்பில்.,
அவன் உறவு.,,
எனக்கும் இது புது உணர்வு.,!!

புது மொட்டு..,
பூவுலகம்  தொட்டு.,
என் கையில் புரண்ட போது.,!!

பாய்ந்தது புது ரத்தம்.,
உணர்ந்தது புது ஸ்பரிசம்.,!!

இன்று.,  எனக்கு தூங்கா இரவு.,
ஆம்., என் மகனின்.,
குவா., குவா.,  சத்தம்..,!!! 
                                                   
                                                         உமா நாராயண், (குமரி உத்ரா)

No comments:

Post a Comment

சித்திரையே வருக.,!!

சித்திரையே.., ஏன் விசித்திரமாய் பார்க்கிறாய்..?? 2020 என்று., இறுமாப்புடன் நிமிர்ந்த போது.., உலகமெங்கும் 🌏 கிடைத...