Tuesday, December 20, 2016

மல்லிகை _ சிறுகதை...!!!

         வான மைதானத்தில் சிதறிய நட்சத்திரங்களாய் ..,உதிர்ந்திருந்த மல்லிகை மொட்டுக்களை ,எடுத்த மஞ்சுளாவின் கைகள் நடுங்கின .
 வெள்ளைப் பூக்களில் மனம் வசமிழந்து போக.,நறுமணம் நாசியில் ஊடுருவ ஏக்கமாய் உதிரிப் பூக்களை கோர்க்க ஆரம்பித்தாள்.
           அக்கா., அக்கா..,எனக்கு  பூ வச்சி விடுவியா அக்கா..,?கடைசி  தங்கை மல்லிகா கொஞ்சலாய் கேட்டாள்.அவள் தலை நிறைய  மல்லிகையை சூடும் போது,இனம் புரியா வேதனை எழுந்தது.
      என்னுடைய நீள கூந்தலில்.., சரம்  சரமாய் பூக்களை படர விடும் வாய்ப்பு எனக்கு மட்டும் ஏன் கிடைக்கவில்லை..? வெள்ளை உடையில் உலா வரும் என் இதய குமுறல் யாருக்கும் கேட்க வில்லையா .?     வெள்ளை உள்ளம் கொண்ட குழந்தை போல, மகிழ்ச்சியாய் சிரிக்கும் மல்லிகைளை விழிகள் விரிய ஆசையோடு வெறித்தாள். மஞ்சுளா.
       நானும் ஒரு நாள் இந்த வெள்ளை உடையை உதறி விட்டு...., மகிழ்ச்சியோடு., சிரிக்கும்  மன்னவனோடு ,தலை நிறைய பூக்களோடு கலர் புடவைகளில் களிப்போடு வலம் வருவேன்.!!
      கரை தட்டிய படகாய்.., நினைவலைகளை கலைத்தது தோழி வருணாவின் குரல்.”என்னடி.. மஞ்சு.,நீ இன்னும் டூட்டிக்கு கிளம்பலியா ..?ஃசீப் டாக்டர் அரவிந்த் திட்டப்போறாரு,” தோழி வருணாவின் குரல் கேட்டு, தற்காலிக ஆசைகளுக்கு அணை போட்டு.., அவசரமாய் உள்ளே ஓடினாள்.
       ““மலருக்கு மணம் சிறப்பு.! மங்கைக்கு குணம் தானே சிறப்பு.!””அந்த குணம் என்னுள் இருப்பதால் தானே..., இந்த புனிதமான பணியை செய்து வருகிறேன். அந்த இறைவனே..., மனம் போல மகிழ்ச்சியான ஒருசிறப்பான வாழ்க்கையை தருவார். மகிழ்ச்சியாய் சிரித்தபடி வெளியே வந்தாள்.          
     “வரு.., நான் ரெடி....கிளம்பலாமா...?” “வெள்ளை சீருடையில்., தலையில் அமர்ந்திருந்த , வெள்ளைத் தொப்பியில்..,  வெள்ளைப் புறாவாய், ஒரு வெள்ளை மல்லிகையாய்  தெரிந்தாள் மஞ்சுளா.!
          மருத்துவமனை வந்த., மஞ்சுளாவின் முகம் பார்த்ததும்.. “,சிஸ்டர்.. வாசு.., நீங்க வந்த பிறகு தான் சாப்பிடுவேன்னு..,அடம் பண்றான்”. ஏழு வயது வாசுவின் தாய் ஏக்கமாய் சொல்ல, ”வாசு..., கால்வலி குறைஞ்சிடுச்சி இல்லை”  இன்னும் இரண்டு நாளிலே நீ ஸ்கூல் போகலாம்.., சாப்பிடுப்பா...” வாசுவின் தலை கோதி அவள் ஊட்டிவிட.. வாசு சாப்பிட ஆரம்பித்தான்.
     “சிஸ்டர் வேணிக்கு வாமிட் வருது.., சீக்கிரம் பாருங்க” டாக்டரின் குரலில் ஓடினாள் மஞ்சுளா.
          ஆறுதலாய் வார்த்தைகள் சொல்லி, தலை தடவி...,நொந்த நோய்களுக்கு  மருந்தூட்டி.., பரிவாய் பேசிய அவளின் கனிவான கவனிப்பில்..,நோயாளிகளின் முகங்களில் பரவச மகிழ்ச்சி.!
      மஞ்சுளா.., மலர்ந்த மல்லிகை முகத்தோடு.,  இறக்கை கட்டிய வெள்ளை தேவதையாய்..,இன்னுமொரு தெரசாவாய், எல்லோரின் கண்களுக்கும் தெரிய ஆரம்பித்தாள்..!! 

                              உமா நாராயண் (குமரிஉத்ரா)                                       
               
     


            

No comments:

Post a Comment

சித்திரையே வருக.,!!

சித்திரையே.., ஏன் விசித்திரமாய் பார்க்கிறாய்..?? 2020 என்று., இறுமாப்புடன் நிமிர்ந்த போது.., உலகமெங்கும் 🌏 கிடைத...