கூவாத குயில்களாய் .,
இருந்த நம்மை..,
கூவ வைத்து , குரல் மொழியை.,
புரிய வைத்தவர்..!!
வெள்ளை பலகைகள் நம்மை.,
கரும் பலகையில்.,
வார்த்தை சித்திரங்களை.,
வரைய வைத்தவர்.,!!
ஆயூத எழுத்துக்கள்நம்மை.,
உயிர் எழுத்தும் மெய்யெழுத்தும்
எத்தனை முக்கியம் என.,
ஆயுதம் எடுக்காமலே.,
ஆர்வமாய் கற்பித்த ஆசான் அவர்.,!!
வண்ணத்து பூச்சிகள் நம்மை.,
வண்ண தூரிகை எடுத்து.,
வானவில் படைக்கும்.,
பிரம்மா ஆக்கியவர்.,!!
முதல் பணியில் நுழைந்த நம்மை.,
முதலெழுத்து.,கையெழுத்து.,
போட பழகி தந்தவர்.,!!
குறும்பாய் குலவி வந்த நம்மை.,
வாழ்க்கை பாடங்களில் .,
பரிட்சை எழுத வைத்தவர்.,!!
தந்தையாய் தாயாய் ஆனநம்மை.,
நம் வித்துக்களான குழந்தைகளுக்கு.,
உரு சொல்லி.,உருக வைத்தவர்.,!!
அந்த ஆசிரியர்.,
பெரு மக்களுக்கு.,
குரு வணக்கம்
சொல்வோம் வாருங்கள்.,!!
உமா நாராயண்,(குமரி உத்ரா)
No comments:
Post a Comment