Saturday, December 17, 2016

கருணை..!!


                    


அன்னை தெரசா...,
கண்களில் எடுத்த ஆயுதம்.. கருணை..!!
இன்றைய உலகில்..,
இடறி விழுந்த காகிதம்..கருணை..!!
அடுக்களை அஞ்சரை பெட்டியில்..,
அரிதான ஒரு சாதனம்..கருணை..!!
வீதியில் விளையாடும் கொலை விளையாட்டுக்களை.,
கண்டு பதுங்கு குழியில் பதுங்கியது..கருணை..!!
முரட்டு உலகில் முகம் காட்ட மறுத்து..,
முகவரி தொலைத்த முகமூடி..கருணை..!!  
அடை  மழை வந்தும்..,
வந்து பார்க்காத வானவில்..கருணை..!!
இரக்கத்தின் சகோதரி..,
நோய்ப்பட்ட பிணைக்கைதி..கருணை..!!
கருணை..., இருந்தும் இல்லாத மாதிரி..,
ஒரு மன பிரமை..!!
சில நேரங்களில், கருணை..,
உயிருக்கு உரு கொடுக்கும் உடல் தானமாய்..,
ரத்தத்தால் சொந்தம் தரும் இரத்த தானமாய்..,
காட்சி பிழை நீக்கும், கண் தானமாய்..,
வானில் மிளிரும் மின்னலாய்..,
வந்து செல்கிறது..,!!
காசில்லாமல்.., கிடைக்கும் கருணை..,
கண்ணியமானவர்களிடம் ..,மட்டும்..!!!!

                                  உமா நாராயண்,
                                   குமரி உத்ரா,


No comments:

Post a Comment

சித்திரையே வருக.,!!

சித்திரையே.., ஏன் விசித்திரமாய் பார்க்கிறாய்..?? 2020 என்று., இறுமாப்புடன் நிமிர்ந்த போது.., உலகமெங்கும் 🌏 கிடைத...