மங்கைக்கு ஒரு வாழ்த்து.,
மலரே உனக்கு ஒரு பாராட்டு..!!
பெண்கள் பிறந்தது ஒரு இடமானாலும்,
பயன் தருவது இ ன்னொரு இடம்..,
அழகு பூ க்களைப்போல..,!!
விதையாய் விழுந்த அவள்,
பூக்களாய்., கனிகளாய்., வாசமாய்,
விருட்சமாய் மறுபடியும்..,
விதை களாய் விஸ்வரூபம் எடுப்பவள்..!!
குழந்தையாய் ., குமரியாய்., சகோதரியாய்,
தாரமாய்., தாயாய்..,
ஆண்களின் சுவாசங்களில் கலந்தவள்..!!
மானுடம் படைத்த இறைவி அவள்,
பாரதி கண்ட புதுமை பூ அவள்,
சக்தியின் பிறப்பிடம் அவள்..,!!
சாகித்தியத்தை புரட்டும் சரித்திரமானவள்.,
இல்லறம் என்ற நந்தவனதேருக்கு.,
சாரதியாய் சக்தி கொடுப்பவள்..!!
வானுலகம் வியந்து வாழ்த்தட்டும்.,
வானவில்ல்லாய் வளையாது.,
வானத்தையே வளைக்க வா..,!!
எத்தனை பரிமாணம் உனக்கு.,
பெண்ணே..,
இந்த அர்ப்பணிப்பு உனக்கு..,!!
No comments:
Post a Comment