எங்கள் தாய்மொழி...,
பொதிகையில் பிறந்த மொழி.,
தாயாய் தாலாட்டும் கனி மொழி.,
நாவில் தவழும் தன் மொழி.,
தரத்தை உயர்த்தும் தனித்துவ மொழி.,
தாயே .., தமிழ் தாயே .,
உனக்கு அமுதன்று பெயர் .,
நீ என்றால் எங்களுக்கு உயிர் .,
நீ இல்லாது தரணியில் ஏது சுவாசப்பயிர் ..?
தாய்க்கு ஒரு தாலாட்டு .,
தமிழே உனக்கிருக்கு பாராட்டு .,
தாய் மொழி என்றால் ஆராட்டு .
சிதறிக் கிடக்கும், மொழிகளில் .,
சிலிர்க்க வைக்கும் என் தமிழை .,
பாமரனும் புரிந்திடுவானம்மா ..!
புதையலாய் கிடைத்த பொக்கிஷம் நீ ,
மூன்று எழுத்தில் எங்கள் மூச்சி..,
அவளிருந்தால் எங்கள் நினைவு
.,
அட காதல் தான் இது.,
அவள் தான் எங்கள் தாய் .,
தமிழுக்கு தலை வணங்கு .,
தரணி எங்கும் புகழ் பாடு...!
உமா நாராயண்,
(குமரி
உத்ரா)
No comments:
Post a Comment