Tuesday, December 20, 2016

உதவி ...!!!

கதிரவன் ஒளியில்.,உலகம் பெற்றது.,
மகத்தான உதவி..!!

குளிர் நிலவின்.,தன்னொளியில்.,
அல்லியும், மல்லியும்.,பெற்ற
அறிய உதவி..,!!

விதைகளாய் புதைந்து.,பின் உயிர் எழுந்து.,
பலன்களை அள்ளி கொடுக்கும்.,
மரங்களின் மேலான உதவி..,!!

சேற்றில் மண் மிதித்து.,சோற்றில் கை வைக்க உதவிய..,
விவசாயத்தின்..,விசேசமான உதவி..,!!

நிகரில்லா உடல் தானம் தந்து.,
இன்னொரு கடவுளாய் உயிரை.,
காத்து தரும் உன்னத உதவி..,!!

நட்பை கற்பாய் நினைத்து..,
பல நேரங்களில் அரவணைக்கும்..
சினேகிதர்களின் சீரிய உதவி..,!

உதவிகள் செய்து..,மனவானில் உயருங்கள்..,!!
மன வாசலை திறந்து..,வானுயர.., வையகம் வாழ்த்த..,
இன்னும் இன்னும் உதவிடுங்கள்..,!!

உயர்ந்த உள்ளங்கள்..,ஏற்றிவைத்த ஏணிப்படிகள்..,
நீங்கள் என்றும்.,ஏற்றமாய் உயா்வீர்கள்..,!!

உமா நாராயண் (குமரிஉத்ரா)

No comments:

Post a Comment

சித்திரையே வருக.,!!

சித்திரையே.., ஏன் விசித்திரமாய் பார்க்கிறாய்..?? 2020 என்று., இறுமாப்புடன் நிமிர்ந்த போது.., உலகமெங்கும் 🌏 கிடைத...