யார் யாரோ எழுதிய கவிதையை..,
யார் யாரோ ரசிக்கின்றாா்..,!!
யார் யாரோ எடுத்த, உளியில்..,
செதுக்கிய சிற்பங்களை தரிசிக்கின்றாா்.,!!
யார் யாரோ எடுத்த மொட்டுக்கள்.,
மாலைகளாய் திருமணத்தில் அணிகின்றாா்.,!!
யார் யாரோ எடுத்த நெல்மணிகள்.,
அமுதாய் யாரோ பசியாறுகின்றாா்..!!
யார் யாரோ விதைத்த விதைகள்.,,
இன்று மரங்களாய் தந்த நிழலில் சிரிக்கின்றாா்.,!!
கனவுகள் உடைந்து கவிதைகள் ஆனது.,
யாருக்கு தெரிந்திருக்கும்.,!!
அந்த கற்கள் பட்ட அடிகள்.,
யாருக்கு புரிந்திருக்கும்.,!!
நெல்மணிகள் சுவாசம் விட்டது.,
யாருக்கு புரிந்திருக்கும்.,!!
மொட்டுக்கள் மலர்ந்த சத்தம்.,
யாருக்கு கேட்டிருக்கும்..!!
.
அந்த மரங்கள் நிழல் தருவது.,
தொடர் கதையாயிருக்கும்.,!!
யாரோ உருவாக்க, யாரோ கனவாக்க.,
காலங்கள் யார் யாருக்கோ .,
மறுபடியும் சுழல்கிறது.,!!
உமா நாராயண்,
,
Congratulations for creating this blog..Happy to see your writing here.May God bless you more and more!!
ReplyDeleteThanks Thangam.
ReplyDelete