முதல் சூடு, முதல் பசி ..,
முதல் யுத்தம் , கால்களை
உதைத்தோம் ..,
அம்மாவின் கருவறையில் ..!
முதல் பாதம் பூமியில்
பதித்தோம் ..,
அம்மாவின் முனகலில் ..!
முதல் சத்தம்..,
அம்மாவின் அரவணைப்பில் ..!
முதல் முத்தம்..,
அம்மாவின் இதழ் சத்தத்தில்
..!
முதல் தவழல்..,
அம்மாவின் புன்னகையில் ..!
முதல் நடை..,
அம்மாவின் கண்காணிப்பில் ..!
முதல் எழுத்து.., அம்மா எழுதினோம்..,
அவளின் ஆசீர்வாதத்தில் ..!
இன்றொரு மகவாய் வளர்ந்தோம்
..,
அம்மாவின் பெருமிதத்தில் ..!
நூறு வருடங்கள்
வாழ்ந்தாலும்..,
பத்துமாத வளர்ப்பு
மறப்போமா..?
மறந்தால் மனிதனாவோமா ..?
உமா நாராயண், (குமரி உத்ரா)
Arumai!!
ReplyDeletethanks..da
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletethanks..da
ReplyDelete