Friday, December 16, 2016

அம்மா ......!!

                           

  முதல் சூடு, முதல் பசி ..,
  முதல் யுத்தம் , கால்களை உதைத்தோம் ..,
  அம்மாவின் கருவறையில் ..!
  முதல் பாதம் பூமியில் பதித்தோம் .., 
  அம்மாவின் முனகலில் ..!
  முதல் சத்தம்..,
  அம்மாவின் அரவணைப்பில் ..!
  முதல் முத்தம்..,
  அம்மாவின் இதழ் சத்தத்தில் ..!
  முதல் தவழல்..,
  அம்மாவின் புன்னகையில் ..!
  முதல் நடை..,
  அம்மாவின் கண்காணிப்பில் ..!
  முதல் எழுத்து.., அம்மா  எழுதினோம்..,
  அவளின் ஆசீர்வாதத்தில் ..!
  இன்றொரு மகவாய் வளர்ந்தோம் ..,
  அம்மாவின் பெருமிதத்தில் ..!
  நூறு வருடங்கள் வாழ்ந்தாலும்..,
  பத்துமாத வளர்ப்பு மறப்போமா..?
 மறந்தால் மனிதனாவோமா ..?
                              உமா நாராயண், (குமரி உத்ரா)

4 comments:

சித்திரையே வருக.,!!

சித்திரையே.., ஏன் விசித்திரமாய் பார்க்கிறாய்..?? 2020 என்று., இறுமாப்புடன் நிமிர்ந்த போது.., உலகமெங்கும் 🌏 கிடைத...